சுவாமிஜியிடம் சில கேள்விகள்
ஒரு இந்து மத சுவாமிஜியிடம் சில கேள்விகள் (எவ்வளவு தூரம் இவர்கள் பொது அறிவுடன் இருக்கிறார்கள் என்று இந்த பதில்கள் வெளிச்சம் போடுகின்றன):
* கேள்வி: சுவாமிஜி, முஸ்லீம் தீவிரவாதிகள் வாரனாசியில், மும்பையில், டெல்லியில், பெங்களூரில், கேரளாவில் இப்படி பல இடங்களில் நூற்றுக்கணக்கான அப்பாவி இந்துக்களை கொன்று குவித்து வருகிறார்களே, இது குறித்து கேள்விப் பட்டிருக்கிறீர்களா…
* சுவாமிஜி: “ஓ… அப்படியா… முஸ்லிம்கள் இந்துக்களை பயமுறுத்துகிறார்களா.. ஏன் ஹிந்துக்கள் பயப்பட வேண்டும்? விளையாட்டுத்தனமாக இருக்கிறதே. உனக்கு தெரியுமா.. தியானம் உனக்கு வலிமை தரும் என்று?
* கேள்வி: ஜிகாதி தீவிரவாதிகள் காஷ்மீரை விட்டு இந்துக்களை உதைத்து அனுப்புகிறார்கள், இந்த இன ஒழிப்பை தடுக்க ஏதாவது ஆலோசனை சொல்லுங்களேன்…
* சுவாமிஜி: நாமும் உண்மையில்லை. நமது உடலும் உண்மை இல்லை என்று உனக்கு தெரியுமா… வேதங்கள், உபநிடதங்களைப் படி. இவற்றை தேடிப் படிக்க இது நல்ல நேரம்.
* கேள்வி: காங்கிரஸ் கட்சியில் இத்தாலிய சோனியா ஊழல் செய்து நமது செல்வத்தைக் கொள்ளை அடிக்கிறாள். இதைப் பற்றி?
* சுவாமிஜி: மக்கள் பணம், பொருட் செல்வத்தைத் தேடி அலைகிறார்கள். நீ எங்கள் தியான வகுப்பில் சேர்ந்து அமைதியும் நிம்மதியும் அடையலாம்.
* கேள்வி: இந்நாட்களில் நமது வாழ்க்கை கடினமாகி விட்டது. ஜிகாதி தீவிரவாதம், மாவோயிச தீவிரவாதம், ஏமாற்றி மதமாற்றம், மக்கள் சுரண்டப் படுவது, மது அருந்தும் தீய பழக்கங்கள், போதை மருந்து புழக்கம், இவையெல்லாம் பெருகி வருகின்றன. எதிர்காலம் குறித்து நம்பிக்கை எங்கே வருகிறது? எங்கே போனது நமது பழைய பெருமைகள்? நமது நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்குமோ?
* சுவாமிஜி: எல்லா நாகரீகங்களும் மனிதர்களைப் போலவே, நேரம் முடிந்தால் இறந்து போகும். எல்லா பயங்கரங்களையும், வாழ்வில் அபாயங்களையும் புரிந்து கொண்டு அவற்றைக் கடந்து சென்று, அவற்றுக்கு மேலே உயர்ந்த ஒன்றை நாம் தேட வேண்டும். பிரம்மத்தின் ஒரு பகுதி தான் நாம் என்று புரிந்து கொண்டு ஆன்ம பலத்தைப் பயன்படுத்தினால் நம்மால் முடியும். உன்னுடைய உளைச்சலுக்கும், எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் போராட உதவி தேவை. எங்கள் தியான வகுப்பில் சேர்.
* கேள்வி: மதச்சார்பற்ற இந்திய அரசு, அதிர்ச்சி அளிக்கும் வகையில் 2891.77 கோடி ரூபாய்கள் (Rs28, 920, 000,000) (US $672,558,140) முஸ்லிம் ஹஜ் பயணத்திற்காக மானியமாக வழங்குகிறது. இந்துக் கோவில்கள் நாத்தீகர்கள், கம்யூனிஸ்டுகள், போலி மதச்சார்பின்மை பேசுபவர்கள் இப்படிப் பட்டவர்கள் தலைமையில் இயங்குகின்றன, இவர்களால் கோவில் சொத்து கொள்ளை அடிக்கப் படுகிறது. இந்த தீமை நிலைக்கு ஏதாவது மாற்று உண்டா…
* சுவாமிஜி: நீ உன் உண்மையான சுயத்தைத் தேடு. இறுதி உண்மையை தேடு. நாம் ஏன் இதைப் பற்றி எல்லாம் பேச வேண்டும்? உன்னுடைய ஆன்மீக முன்னேற்றத்தை உடனே துவக்கு, நிறைவான மன நிம்மதியைப் பெறுவாய்…
மேலும் படிக்க:


leave a comment